செவ்வாய், 22 டிசம்பர், 2009

கண்ணீரே விஷம்

என் இனியவளே!
இப்படி உன்னைக் கூப்பிட
எப்படியெல்லாமோ தவித்தவன்

கவிதை உன்னை
கைபடாமல் வாசித்தவன்

நேசம் சொல்ல
நெருங்கி வந்தவன் -உன்

மோச சொல்லில்
நொறுங்கிப் போனவன்

எழுதுகிறேன்
இல்லை... இல்லை..
அழுகிறேன்
என்பதே சரி.


மஞ்சள் காடுகளையும்
மயக்கிப் போகும்
உன் முகத்தில்
மௌனங்களை ஏனடி
பூசிக்கொண்டாய்?

அப்படி என்ன கேட்டுவிட்டேன்?

ஆசைக்கு முத்தமா கேட்டேன்?
ஆயுளுக்கும் அன்புதானடி கேட்டேன்


நீயும்....
நானும்.....

காத்திருந்தது -
கனவு கண்டது-
காதலித்தது-
எல்லாம் நிஜம்.
நீ பொய்யென்றால்
என் கண்ணீரே
எனக்கு விஷம்....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக