புதன், 23 டிசம்பர், 2009

தெய்வத்தின் முன்னால்.......

உலகத்தின்
எளியவருக்காய்
வழிந்த
முதல் கண்ணீருக்கும்
இரத்தத்திற்கும்
உரிமையனவரே
உலகரட்சகரே!

என்னை மன்னித்துவிடும் .

பாவங்களைப் பொறுத்துக்கொள்ள
பரிசுத்தமாயிருக்க
என்னால் முடியாது .

ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னம் காட்ட சொன்னீர்
இருகன்னம் காட்டியும்
இரக்கம் காட்டவில்லை உலகம் . இனி
காட்ட கன்னமில்லை
கர்த்தரே!

என்னை மன்னித்துவிடும் .

முள்ளிடம் மென்மை போதிக்க
கல்லிடம் கருணை யாசிக்க
துரோகத்தை தலைக்கு வைத்துப்படுக்க

என்னால் முடியாது
என்னை மன்னித்துவிடும் தேவனே!

இறைவனே!
உன்
முன்னால் நான்
பாவியாக நின்றாலும்
அடக்குமுறைக்கு முன்
அடிமையாக மட்டும் நில்லேன்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக